• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோவில்

July 11, 2018 findmytemple.com

சுவாமி:புருஷோத்தமர்.

அம்பாள்:புருஷோத்தம நாயகி.

மூர்த்தி:ராமர்,சீதை,லட்சுமணன்,ஆஞ்சநேயர்.

தீர்த்தம்:திருபாற்கடல்.

தலவிருட்சம்:பலா,வாழைமரம்.

தலச்சிறப்பு:பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 30 வது தலம் ஆகும். இத்தலத்தில் மூலவர் புருஷோத்தமர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தாயார் புருஷோத்தம நாயகி அமர்ந்த திருக்கோலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் ராமர்,சீதை,லட்சுமணன்,ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

ஆண்டாள்,நம்மாழ்வார்,உடையவர்,சேனை முதலியார் ஆகியோர் தனி சன்னதியில் காட்சியளிக்கின்றனர்.இத்தலத்தில் மூன்று ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளது.அதில் ராமர் சன்னதியில் இருக்கும் ஆஞ்சநேயர் கைகட்டி வாய்பொத்திய நிலையில் அருள்பாலிக்கிறார். வைணவத் திருத்தலங்களில் புருஷோத்தமன் என்ற திருநாமத்தில் இறைவன் அருள்பாலிக்கும் ஒரே தலம் ஆகும்.இத்தல இறைவனின் வள்ளல் தன்மையை உயர்வுபடுத்திக் காட்ட வண் புருடோத்தமன் என அழைக்கப்படுகிறார்.எனவே இத்தலம் வண்புருடோத்தமம் என அழைக்கப்படுகிறது.

அருகிலுள்ள நகரம்:சீர்காழி.

கோவில் முகவரி:அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோவில், திருவண்புருசோத்தமம்,திருநாங்கூர் – 609 106 (சீர்காழி-திருநாங்கூர்) நாகப்பட்டினம் மாவட்டம்

மேலும் படிக்க