• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐபிஎல் 2018: முதன் முறையாக டி.ஆர்.எஸ் முறை அமல்!

March 22, 2018 tamilsamayam.com

முதன் முறையாக இந்த ஆண்டின் 11வது ஐபிஎல் சீசனில் டிஆர்.எஸ் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஐபிஎல் 11வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 7ம் தேதி தொடங்க உள்ளன. இதற்கான வீரர்கள் ஏலம் நடந்து முடிந்து போட்டிக்காக தயாராகி வருகின்றனர். இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கும் 11வது ஐபிஎல் போட்டி மே மாதம் 27ம் தேதி நடக்கிறது. இதில், 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த நிலையில், முதன் முறையாக இந்த ஆண்டில் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா கூறுகையில்,

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ் முறை முதன் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி, சர்வதேச டி20 போட்டியில் இருப்பது போன்று ஒவ்வொரு அணியும் ஒரு முறை நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யலாம். அது சரியான அப்பீலாக இருந்தால், தொடர்ந்து அப்பீல் செய்ய முடியும் என்று கூறினார். மேலும், இந்த தொடரில் பேட்டிங்கில் அதிக ஸ்டிரைக் ரேட் வைக்கும் வீரருக்கு கார் பரிசாக அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க