• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு வைரவர் திருக்கோவில்

March 12, 2018 findmytemple.com

சுவாமி : வளரொளிநாதர்(வைரவன்).

அம்பாள் : வடிவுடையம்பாள்.

தீர்த்தம் : வைரவர் தீர்த்தம்.

தலவிருட்சம் : ஏர், அளிஞ்சி.

தலச்சிறப்பு : இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக ஏழிசைத் தூணுடன் அமைந்துள்ளது.  நகரத்தார்களின் ஒன்பது நகரக் கோவில்களுள் ஒன்றாகும்.

திருத்தல வரலாறு : சிவனைப் போல ஐந்து தலையுடன் இருந்ததால் பிரம்மா, தான் என்ற  அகந்தையுடன் இருந்தார்.  ஒரு முறை பார்வதி தேவி, தனது கணவர் என நினைத்து அவருக்குரிய  மரியாதைகளை, பிரம்மனுக்கு செய்தார்.  பிரம்மனும் மறுப்பு எதுவும் சொல்லாமல் இருந்து  விட்டார்.  பின்பு, அவர் பிரம்மன் என உணர்ந்த பார்வதி, சிவனிடம் பிரம்மனின் செயல் குறித்து  கூறினாள்.  எனவே, சிவன், தனது அம்சமான பைரவரை அனுப்பி பிரம்மாவின் ஒரு தலையை  கிள்ளி எறிந்தார்.  இவரே, இத்தலத்தில் வைரவர் என்ற பெயரில் அருளுகிறார்.

நடைதிறப்பு :  காலை 6.00 மணி முதல்  மதியம் 12.45 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு  8.45 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் : சம்பகசூர சஷ்டி, பிள்ளையார் நோன்பு.

அருகிலுள்ள நகரம் : திருப்பத்தூர்.

கோயில் முகவரி : அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோவில்,வைரவன்பட்டி – 630 215, சிவகங்கை மாவட்டம்.

மேலும் படிக்க