• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சந்திரசேகரர் சுவாமி திருக்கோவில்

March 2, 2018 findmytemple.com

சுவாமி : ஸ்ரீ சந்திரசேகரர்.

தலச்சிறப்பு : உலகின் முதல் வழிபாடு சிவவழிபாடு ஆகும்.  மனிதனின் உடலில் ஜீவனாக (சிவமாக) இருப்பவர் சிவபெருமான்.   இத்தலத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் சிவபெருமானுக்கு மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.  ஆண்டுதோறும்  மகாசிவராத்திரி விழாவையொட்டி மாலை 4.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை 4 கால பூஜைகள் நடைபெறும்.

அப்போது 16 வகையான திரவியங்களால் சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும்.   அப்போது சிவலாயம் சென்று சிவனை வழிபட்டால் ஒரு ஆண்டு சிவாலயம் சென்று சிவனை வழிபட்ட பலனை பெறலாம் என்பது  நம்பிக்கை.  மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு 4 கால பூஜையின் போது சுவாமி தரிசனம் செய்தால் வாழ்வில்  தொல்லைகள் நீங்கி நிம்மதியான மனத்தையும், நோயற்ற வாழ்வையும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

திருவிழாக்கள் : மகா சிவராத்தி.

அருகிலுள்ள நகரம் : திருச்சி மாவட்டம்.

கோவில் முகவரி : ஸ்ரீ சந்திரசேகரர் சுவாமி திருக்கோவில்,திருசெந்துறை, ஜீயபுரம் வட்டம், திருச்சி மாவட்டம்.

மேலும் படிக்க