July 15, 2017
தண்டோரா குழு
பிரைட் சிக்கனுக்கு பெயர் போன கேஏப்சி நிறுவனம் சினாவின் ஹவாய் நிறுவனத்துடன் சேர்ந்து ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிட உள்ளது.
கடந்த 1987ம் ஆண்டு சினா நாட்டில் பெய்ஜிங்கில் உள்ள கியன்மேன் என்னும் இடத்தில் கேஏப்சி தொடங்கப்பட்டது.சீனாவில் 3௦ வருடங்கள் சேவையாற்றியதன் நினைவாக, கேஏப்சி நிறுவனம் சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான ஹவாயுடன் சேர்ந்து ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த ஸ்மார்ட் போனில் 5.5 அங்குல திரை, 32 ஜிபி சேமிப்பு, மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளது. இதன் மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், அந்த போனின் பின்பகுதியில் கேஎப்சி நிறுவனத்தின் நிறுவனர் கலோனல் சாண்டேர்ஸ் உடைய புகைப்படம் இருக்கும்.
முதலில், 5௦௦௦ ஸ்மார்ட் போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 10,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.