• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்

July 15, 2017 தண்டோரா குழு

பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

பேஸ்புக் குறித்து அறியாத மக்களும், அதை பயன்படுத்துவோர் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நகர் புறமாக இருந்தாலும் சரி கிராமத்து புறமாக இருந்தாலும் சரி, அனைவருடைய கவனத்தை பேஸ்புக் ஈர்த்துள்ளது.

முன்னதாக,அதிகமாக பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கையின் அமெரிக்க முதல் இடத்தில் இருந்தது. தற்போது இந்திய முதல் இடத்தை பிடித்துவிட்டு, அமெரிக்காவை இரண்டாவது இடத்திற்கு தள்ளியுள்ளது. கடந்த 6 மாதங்களில் இந்தியாவில் பேஸ்புக்கை கணக்குகள் தொடங்கியவர்கள் மட்டும் 27 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே 6 மாதத்தில் அமெரிக்காவில் பேஸ்புக் கணக்குகள் தொடங்கியவர்கள் 12 சதவீதமாக இருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

பேஸ்புக் பயன்டுத்துவோர்களில் முக்கால் பேர் ஆண்கள் என்றும்,ஆனால் அமெரிக்காவில் பேஸ்புக் பயன்டுத்துவோர்கள் 54 சதவீதம் பெண்கள் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பேஸ்புக் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அதனுடைய மொத்த பயன்பாடு குறைவாகவே இருக்கிறது. மக்கள் தொகையில் 19 சதவீதம் பேர் சமூக வலைத்தளங்களை ஜூன் மாதத்தில் உபயோகப்படுத்தியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க