• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காசோலை மோசடி வழக்கு : இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

July 11, 2017 தண்டோரா குழு

கோவையில் காசோலை மோசடி வழக்கில் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

கோவை உப்பிலிப்பாளையத்தில் ‘குளோபல் இன்டியா இன்டர்நேஷனல் திரட் எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனம் இயங்கி வந்தது. இதன் நிர்வாக இயக்குநர் தினேஷ்குமார் என்கிற புருஷோத்தமன், விற்பனை மேலாளராக ராஜா என்கிற வெங்கடபதி ஆகியோர் தங்களுடைய நிறுவனத்திற்கு நூல் தேவை என பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்தனர். இதை பார்த்த கோவை சவுரிபாளையத்தில் உள்ள கண்ணபிரான் மில்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் வேலுசாமி, இருவரையும் அணுகியுள்ளார்.

அப்போது ரூ.63.79 லட்சம் மதிப்புள்ள நூல் கண்ணபிரான் மில்ஸ் நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டது. இதற்காக முன்பணமாக ரூ.37.69 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.26.10 லட்சம் பணத்திற்கு தினேஷ்குமார் மற்றும் ராஜா ஆகியோர் 30 செக்கினை வேலுசாமியிடம் கொடுத்துள்ளனர்.

ஆனால், அனைத்து செக்கும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வேலுசாமி இதுகுறித்து விசாரித்துள்ளார்.

அப்போது, குளோபல் இன்டியா இன்டர்நேஷனல் திரட் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர் சின்ன பழனிசாமி என்பதும், இந்த நிறுவனத்தில் தினேஷ்குமார் மற்றும் ராஜா என யாரும் பணிபுரியவில்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து வேலுசாமி பணமோசடி குறித்து கடந்த 10.6.2002 அன்று, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தினேஷ்குமார் மற்றும் ராஜா இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, கோவை ஜே.எம்.3 நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், தினேஷ்குமார் மற்றும் ராஜா மீதான செக்மோசடி குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வேவலுசாமி இன்று தீர்ப்பளித்தார். மேலும் அபராதத்தை கட்டத்தவறினால் 9 மாதம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க