• Download mobile app
07 Mar 2026, SaturdayEdition - 3678
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராஜஸ்தானில் நொறுங்கி விழுந்த விமானம்

July 6, 2017 தண்டோரா குழு

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ராஜஸ்தானில் நொறுங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்ஐஜி 23 விமானம் ராஜஸ்தானில் ஜோத்பூரிலுள்ள பலேசர் என்னும் பகுதியில் நொறுங்கி விழுந்துள்ளது. 48 மணிநேரத்தில் நடந்த இரண்டாவது விபத்து ஆகும். எம்ஐஜி 23 விமானத்தின் பயணித்த விமான ஓட்டுநர்கள் விமானத்திலிருந்து வெளியேறியதால் உயிர் தப்பியுள்ளனர்.

அருணாச்சலபிரதேஷ மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த, இந்திய விமான படைக்கு சொந்தமான மற்றொரு Advanced Light Helicopter (ALH) விமானம் விபத்திற்குள்ளானது. இந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் நேற்று கண்டுப்பிடிக்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியது. ஆனால் இந்திய விமான அலுவலகம் இது குறித்து உறுதி செய்யவில்லை.

கடந்த மே மாதம், அஸ்ஸாம், அருணாச்சலபிரதேஷ் எல்லையில் சுக்ஹோய் – 3௦ போர் விமானம் விபத்துக்குளாகி இரண்டு விமான ஒட்டுநர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க