• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல் – 8 இந்திய மீனவர்கள் கைது

July 6, 2017 தண்டோரா குழு

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்திய- தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் அத்து மீறி கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். அவர்கள் இந்திய- தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர்.

மேலும் மீனவர்களின் 2 விசைபடகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இந்திய- தமிழக மீனவர்கள் 8 பேரை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கும் முயற்சியில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க