• Download mobile app
07 Jul 2025, MondayEdition - 3435
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இஸ்ரேல் மலருக்கு “மோடி” யின் பெயர்

July 5, 2017 தண்டோரா குழு

இஸ்ரேல் நாட்டிற்கு சென்றுள்ள இந்திய பிரதமரை கௌரவிக்கும் விதமாக, அங்கு அதிகமாக வளரும் கிரைசாந்துமன் மலருக்கு “மோடி” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் சென்றுள்ளார்.அங்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,மற்ற மூத்த அமைச்சர்கள் விமான நிலையத்துக்கு நேரில் வந்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டின் பிரதமருடன்,டேன்சிங்கர் மலர் பண்ணைக்குச் சென்றார். அங்கு அவர் மலர் சாகுபடியில் பின்பற்றப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.

இதனையடுத்து டேன்சிங்கர் மலர் பண்ணைக்குச் மோடி வந்ததை நினைவு கூறும் வகையில் கிரைசாந்துமன் பூ ஒன்றுக்கு `மோடி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை பிரதமர் அலுவலக டுவிட்டர் பக்கத்திலும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க