• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொடர்ந்து மூன்றாவது நாளாக திரையரங்குகள் மூடல்!!

July 5, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி இன்று மூன்றாவது நாளாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி சட்டத்தை அறிமுகப்படுத்தியது.தமிழகத்தில் மட்டும்,சினிமாத்துறையில் ஜிஎஸ்டி வரி மட்டுமில்லாமல் கேளிக்கை வரியையும் ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 30 சதவிகித கேளிக்கை வரி செலுத்திவரும் நிலையில், மேலும் 28 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சினிமாத்துறைக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள இந்த இரட்டை வரி முறையை ரத்து செய்யக்கோரி திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த திங்கள் கிழமை முதல் வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இதனால்
கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ 35 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்,தமிழகத்தில் 3வது நாளாக காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் படங்கள் குறித்த எந்த விளம்பரங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க