• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் பாடத்திட்டங்களை மாற்ற குழு அமைப்பு : தமிழக அரசு

July 4, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் உள்ள பள்ளி பாடத்திட்டத்தை மாற்றுவதற்காக தமிழக அரசு இரு குழுக்களை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத்திட்டத்தை மாற்றுவதற்காக கலைத்திட்ட வடிவமைப்புக் குழு மற்றும் உயர்மட்டக்குழு என இரண்டு குழுக்கள் தமிழக அரசின் சார்பாக நியமிக்கப்பட்டுள்ளது.

பத்து பேர் அடங்கிய கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவிற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமை வகிப்பார்.மேலும் இக்குழுவில் செயலாளராக அறிவொளியும், உறுப்பினர்களாக எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன், ராமானுஜம், சுந்தரமூர்த்தி, ராமசாமி, சுல்தான் அகமது இஸ்மாயில், உள்ளிட்டோர் இருப்பார்கள்.

உயர்மட்டக்குழுவிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை வகிப்பார். பாலகுருசாமி, விஜயகுமார் ஐஏஎஸ் உள்ளிட்ட 13 பேர் இக்குழுவில் அடங்குவார்கள்.

மேலும் படிக்க