• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அ.தி.மு.க அணிகள் இணைய பேச்சுவார்த்தை – ஜெயக்குமார்

July 4, 2017 தண்டோரா குழு

அதிமுகவில் ஓபிஎஸ் அணியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தை இன்னும் நடைபெற்று வருகிறது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க அணி இணைவதற்கான குழு கலைக்கப்பட்டாலும்,இரு அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை தொடருகிறது.

ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து பேசியுள்ளனர். கட்சியை வழி நடத்த ஏழு பேர் கொண்ட குழுவை ஏற்படுத்துவது குறித்து பேசப்பட்டு வருகிறது.

மேலும், குழுவின் தலைவராக ஓபிஎஸ் செயல்படுவார் என்றும், வழிநடத்தும் குழுவின் துணைத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க