• Download mobile app
29 Oct 2025, WednesdayEdition - 3549
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோடநாடு எஸ்டேட் தொடரும் மர்மம்: கோடநாடு எஸ்டேட் கணக்காளர் மர்ம மரணம்

July 3, 2017 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி வந்த கணக்காளர் இன்று மர்ம முறையில் இறந்துள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் 24 ம் தேதி காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் இதுவரை போலீசார் 10 பேரை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனகராஜ் மற்றும் சயான் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் விபத்தில் சிக்கினர். இதில் கனகராஜ் இறந்து போனார். யார் உண்மை குற்றவாளி என்று மர்மமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், கோடநாடு எஸ்டேட்டில் கணக்காளராக பணியாற்றி வந்த தினேஷ்குமார் 28. அவரது இல்லத்தில் இன்று திடீரென இறந்துள்ளார்.

இதையடுத்து, இந்த சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோத்தகிரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவிற்கு பின் கோடநாடு எஸ்டேட் தொடர்ந்து மர்ம மரணங்கள் நிகழ்ந்து வருகிறது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க