• Download mobile app
30 Aug 2026, SundayEdition - 3854
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்

July 3, 2017 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்த்திகேயன் தகவல்.

கோவை மாநகராட்சியில் 1871 முதல் 2015-ம் வருடம் வரையிலான பிறப்பு, இறப்பு பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2011-ம் வருடம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகள் பிறப்பு, இறப்பு பதிவேடுகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை (www.ccmc.gov.in) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

எனவே, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் 1981 முதல் 2015 வரையிலான வருடங்களுக்கான சான்றிதழ்கள் இணையதள முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் சான்றிதழ்களை பெற தபால் தலை ஒட்டிகள் மூலம் இணைத்து விண்ணப்பித்தால் தபால் மூலம் அனுப்பப்படும். அதே போல் கூரியர் மூலம் வேண்டும் என விண்ணப்பித்தால் கூரியரில் அனுப்பப்படும்.

கோவை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு பதிவு மற்றும சான்றிதழ்கள் அனைத்தும் அலுவலக மென்பொருள் கொண்டு பயன்படுத்துவதில்லை. கோவை மாநகராட்சிக்கென தனியான மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

மேலும் படிக்க