• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லண்டனில் 24 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!

June 14, 2017 தண்டோரா குழு

லண்டனில் 24 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள கிரென்பெல் டவர் 24 மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் ஒட்டு மொத்தமாக 24 மாடி கட்டிடமும் பயங்கரமாக எரிந்து வருகிறது.

இதையடுத்து தீயை அணைக்க 40 வாகனங்களுடன் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்,இப்பயங்கர தீவிபத்தால் ஒட்டுமொத்த கட்டிடமுமே இடிந்து விழும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க