• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.56.92 கோடி நிதி ஒதுக்கீடு -தமிழக முதல்வர்

June 12, 2017 தண்டோரா குழு

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூபாய் 56.92 கோடி நிதி ஒதுக்கி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜுன் மாதம் தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால், இந்த வருடம் பருவ மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி ரூ.56.92 கோடி நிதி ஒதுக்குவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும், பயறுகளின் சாகுபடியை ஊக்கப்படுத்த விதைகளுக்கு ஏக்கருக்கு ரூ.960 வீதம் வழங்கப்படும் எனவும், இந்த ஆண்டும் 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இதுத் தவிர நெல் பயிருக்கு மாற்றாக 1.32 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாற்று பயிர் சாகுபடி நடவடிக்கை, பயிர் மற்றும் நெல் சாகுடி விவசாயிகளுக்கு உரங்கள் 100 சதவீதம் மானியத்தின் கீழ் வழங்கப்படும் எனவும், நெல் நடவு இயந்திரங்களைக் கொண்டு நடவு செய்ய ரூ.4000ம்,ஜிங்க் சல்பேட் மற்றும் உயிர் உரங்களுக்கு ஏக்கருக்கு ரூ.520 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க