• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்டா மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது – சென்னை வானிலை ஆய்வு மையம்

June 6, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை டெல்டா மாவட்டங்களில் தொடங்கியுள்ளது, அடுத்த 3 நாட்களில்பிற பகுதிகளிலும் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;

“கேரளாவில் கடந்த மாதம் 30-ம் தேதி தென்மேற்கு பருவமழைதொடங்கியது.அதே போல் தமிழகத்திலும் தற்போது தென்மேற்கு பருவமழை டெல்டா மாவட்டங்களில்தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தென் மற்றும் மேற்கு தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக பாபநாசத்தில் 14 செ.மீட்டர்மழையும், திருவாரூர் மாவட்டம்வலங்கைமானில் 8 செ.மீட்டர்மழையும் பதிவாகியுள்ளது. அடுத்த 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தொடங்க வாய்ப்பு உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க