• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமான நிலையங்களில் பயணிகளின் கைப்பைகளுக்கு சீல் கிடையாது

May 30, 2017 தண்டோரா குழு

சென்னை உட்பட ஆறு விமான நிலையங்களில்,வரும் ஜூன் 1 முதல் பயணிகள் கொண்டு செல்லும் கைப்பைக்கு பாதுகாப்பு சீல் போடும் நடைமுறை கைவிடப்படுகிறது.

பல ஆண்டுகளாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளில் கொண்டு செல்லும் கைப்பைக்கு சீல் போடும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல், அந்த முறை நிறுத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு படையின் இயக்குனர் ஓ.பி.சிங் கூறுகையில்,

தற்போது, புதுதில்லி, மும்பை, கொச்சின், பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், மற்றும் அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களில் உள்நாட்டு பயணிகளின் கைப்பைக்கு சீல் போடும் நடைமுறை ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெய்பூர், லக்னோ, கவுஹாத்தி, பாட்னா, சென்னை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

விமான பயணத்திற்கு அச்சுறுத்தும் விதமான பொருட்களை எடுத்துச் செல்வதை தவிர்ப்பதற்கு இந்த பாதுகாப்பு சீல் போடப்படும் நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.

தற்போது, விமான நிலையங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், ஸ்கேனிங் இயந்திரங்கள் வந்துவிட்டதால், பயணிகளின் கைப்பைகளுக்கு சீலிடும் முறையை படிப்படியாக கைவிடப்பட்டு வருகிறது.

மேலும் அடுத்த ஒரு வாரத்துக்கு விசாகப்பட்டினம், கோவா, புனே, புவனேஸ்வர், வாரணாசி உள்ளிட்ட விமான நிலையங்களில் துணை ராணுவத்தினர் சோதனை முறையில் இந்த நடைமுறையை செயலப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க