• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கபில் தேவிற்கு மெழுகு சிலை: மேடம் துசாட்ஸ் கவுரவம்!

May 12, 2017 tamilsamayam.com

பிரபல மெழுகுச்சிலை அருங்காட்சியகமான மேடம் துசாட்ஸ், முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவிற்கு மெழுகு சிலை வைத்து கவுரவித்துள்ளது.

பல துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களை அச்சுஅசல் அப்படியே மெழுகு சிலைகளாக வடிவமைத்து உலக அளவில் புகழ் பெற்ற அருங்காட்சியகம் மேடம் துசாட்ஸ்.

இதில் இந்திய பிரதமர் மோடி, ஜாம்பவான் சச்சின், பாலிவுட பிரபலங்களான அமிதாப் பச்சான், ஷாருக் கான், ஹிரித்திக் ரோசன், ஐஸ்வர்யா ராய், ஆகியோர் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளனர்.

இந்தவரிசையில், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவும் இடம்பிடித்துள்ளார். இவரது சிலை டில்லியில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. முன்னாள்இந்திய கேப்டன் கபில்தேவ் 58. இவரது தலைமையில் கடந்த 1983-ல் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்றது. இவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் மெழுகு சிலை வைக்க முடிவு செய்தது.

அதன்படி கபில்தேவ் பந்துவீசுவது போன்ற மாடலில் டில்லி அருங்காட்சியகத்தில் அவருக்கு மெழுகு சிலை வடிவமைத்தது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. இதில் கபில்தேவ் கலந்து கொண்டு தனது சிலையை பார்த்து ஆச்சர்யப்பட்டார்.

மேலும் படிக்க