• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சீமைக்கருவேல மரங்களை வெட்ட தடை நீடிப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு

May 11, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சீமைக்கருவேல மரங்கள் வெட்டுவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,

தமிழக அரசு ஒரு நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளது. தமிழ்நாடு வனத்துறை தலைமை பாதுகாவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழு சீமைக்கருவேல மரங்கள் பாதிப்பு குறித்து அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யும் என்றும், இந்தக் குழுவில் வேளாண்பல்கலை பேராசிரியர், கால்நடை பல்கலை பேராசிரியர், சட்ட, வேளாண்துறை அதிகாரிகள் உட்பட 7 பேர் உறுப்பினராக உள்ளனர். மேலும் இந்த குழு 3 மாதத்தில் அறிக்கை அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “தமிழக அரசு, நிபுணர்கள் குழு அமைத்தால், அந்த குழுவில் எங்கள் தரப்பில் 4 நிபுணர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,இந்த வழக்கு விசாரணையை ஜூலை மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.அதுவரை, தமிழகத்தில் சீமை கருவேலம் மரத்தை அகற்ற விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க