• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விமான நிறுவன அதிகாரி முகத்தில் கேக் பூசிய பார்வையாளர்

May 10, 2017 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவை சார்ந்த கோண்டஸ் விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரி பேசிக்கொண்டிருக்கும் போது அவரது முகத்தில் மற்றொருவர் கேக் உணவை பூசிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கோண்டஸ் விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆலன் ஜாய்ஸ் கூட்டம் ஒன்றில் ‘லண்டன் நகரிலிருந்து பெர்த் நகருக்கு இடையே நேடியாக பயணம் செய்யும் விமானம் ஒன்றை தொடங்குவதை’ குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, பார்வையாளர் ஒருவர் திடீரென எழுந்து மேடைக்கு வந்து அவருடைய முகத்தில் ‘பை’ என்ற கேக் உணவை பூசினார். இதனால் ஜாய்ஸ் அதிர்ச்சியடைந்தார்.

அதன் பின் அவர் உடனே அங்கிருந்து எந்த ஒரு சலனமும் இல்லாமல் சென்று தனது முகத்தை சுத்தம் செய்துவிட்டு, மீண்டும் கூட்டத்திற்கு வந்தார். இதனால் அவரை மக்கள் கைத்தட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். “இவ்வாறு நடந்ததற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை” என்றார் அவர்.

இந்த சம்பவத்தை பார்த்த ஒருவர் கூறுகையில்,

“இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடக்க என்ன காரணம் என்று தெளிவாக தெரியவில்லை” என்றார்.

“இந்த சம்பவத்திற்கு காரணமான அந்த நபரை கைது செய்துள்ளோம். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று பேர்த் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

மேலும், இப்படிப்பட்ட சம்பவம் நடந்து முதல்முறை அல்ல. நியூஸ் கார்ப் நிர்வாக தலைவர், ரூபர்ட் முர்டோக், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜெர்மி கிளார்க்சன் ஆகியோருக்கும் இது போன்ற சம்பவம் நடத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க