• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

15 -ம் தேதி திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் – சி.ஐ.டி.யு.

May 9, 2017 தண்டோரா குழு

போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் வரும் 15 -ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் 13 வது ஊதிய ஒப்பந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வரும் 15-ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தன.

இந்நிலையில் போக்குவரத்து தொழிற்ச்சங்கத்தினர், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை வழங்க அரசு ஒதுக்கி உள்ள ரூ.500 கோடி போதாது, அரசு உடனே ரூ.2,000 கோடி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட வில்லை.

இதன் காரணமாக திட்டமிட்டப்படி வரும் 15 -ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று செய்தியாளர்களிடம் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

தொழிற்ச்சங்கங்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “500 கோடி ரூபாய் நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்படும், போராட்டம் நடத்துவதால் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காது, போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் படிக்க