• Download mobile app
15 Jan 2026, ThursdayEdition - 3627
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புது வீட்டில் குடியேறிய ஓபிஎஸ்

March 9, 2017 தண்டோரா குழு

தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் புதிய வீட்டிற்கு வியாழக்கிழமை
குடிபுகுந்தார்.முதலமைச்சராக இருந்த போது அரசு சார்பில் அவருக்கு கீரின்வேஸ் சாலையில் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது.

அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றதும், பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்ட அரசு இல்லத்திலிருந்து அவரை காலி செய்யுமாறு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இதனைத் தொடர்ந்து போயஸ் கார்டன் பகுதியிலுள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையத்திற்குப் பின்புறம் இருக்கும் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள புது வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை குடியேறினார். இனி, இந்த வீட்டில் இருந்துகொண்டுதான் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க