• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மார்ச் 16-ம் தேதி பட்ஜெட் தாக்கல்

March 8, 2017 தண்டோரா குழு

தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார்.

இது குறித்து சட்டப்பேரவை செயலர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்

“தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பேரவையின் அடுத்தகூட்டத்தை, மார்ச்16- ம் தேதி காலை 10.30 மணிக்கு கூட்டியுள்ளார்கள். அதில் 2017-2018-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கைகளை சட்டப்பேரவைக்கு அளிக்க வேண்டுமென்று ஆளுநர் கேட்டு கொண்டுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட் தாக்கல் குறித்து தொழில்துறையினர் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் படிக்க