• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இலங்கை கடற்படை மறுப்பு

March 7, 2017 தண்டோரா குழு

கடல் தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். மற்றொருவர் காயமடைந்தார். இந்தச் சம்பவத்தை இலங்கைக் கடற்படையினர் மறுத்துள்ளனர்.

40 ஆண்டுகளுக்கு முன் கச்சத் தீவை இலங்கை நாட்டிற்குக் கொடுக்கப்பட்டது. இருப்பினும், இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை இன்று வரை முடிவுக்கு வரவில்லை. இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தாலும் அவர்களை இலங்கை கடற்படடையினர் தாக்குவதும் கைது செய்வதும் தொடர்கதையாகிவிட்டது.

தமிழக கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். அதில் பிரிட்ஜோ என்னும் 22 வயது மீனவர் உயிரிழந்தார் மற்றொரு மீனவர் காயமடைந்தார். இதையடுத்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஆனால், இந்த சம்பவத்துக்கு இலங்கை கடற்படை மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க