• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இலங்கை கடற்படை மறுப்பு

March 7, 2017 தண்டோரா குழு

கடல் தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். மற்றொருவர் காயமடைந்தார். இந்தச் சம்பவத்தை இலங்கைக் கடற்படையினர் மறுத்துள்ளனர்.

40 ஆண்டுகளுக்கு முன் கச்சத் தீவை இலங்கை நாட்டிற்குக் கொடுக்கப்பட்டது. இருப்பினும், இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை இன்று வரை முடிவுக்கு வரவில்லை. இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தாலும் அவர்களை இலங்கை கடற்படடையினர் தாக்குவதும் கைது செய்வதும் தொடர்கதையாகிவிட்டது.

தமிழக கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். அதில் பிரிட்ஜோ என்னும் 22 வயது மீனவர் உயிரிழந்தார் மற்றொரு மீனவர் காயமடைந்தார். இதையடுத்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஆனால், இந்த சம்பவத்துக்கு இலங்கை கடற்படை மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க