• Download mobile app
16 Apr 2026, ThursdayEdition - 3718
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம்

February 24, 2017 தண்டோரா குழு

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க ரூ.15 கோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த மாதம் எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மோதியதில், எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. இதனால், எண்ணூர் மற்றும் அதன் சுற்றுப்புறக் கடல் பரப்பில் பெரும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், அங்கு மீன்வளம் குறைந்ததோடு, அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவர் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் ரூ.75 லட்சம் மதிப்பில் எர்ணாவூர் மற்றும் நொச்சிக்குப்பத்தில் மீன்சந்தைகள் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க