• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கழக அரசை நிலை நிறுத்தி மக்கள் பணியாற்றுவோம் – வி.கே. சசிகலா

February 23, 2017 தண்டோரா குழு

ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று கழகத்தைக் காப்போம், கழக அரசை நிலை நிறுத்தி மக்கள் பணியாற்றுவோம் என சபதம் ஏற்போம் என்று அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா ,அ.தி.மு.க தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

பிப்ரவரி 24-ம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69 வது பிறந்த நாள் விழா அனுசரிக்கப்படவுள்ளது. இதனை அடுத்து அ.தி.மு.க தொண்டர்களுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா சிறையில் இருந்தவாறு வியாழக்கிழமை கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர் எழுதியிருப்பதாவது;

“ ஜெயலலிதா தமிழக மக்களுக்காக நிறைவேற்ற நினைத்திருந்த திட்டங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி, மக்கள் வாழ்வில் ஒளியேற்றி, எல்லோருக்கும் எல்லாமுமாய்த் திகழ்ந்த ஜெயலலிதாவின் புகழ் நிலைத் திருக்கும் வண்ணம் தமிழக அரசு செயல் பட வேண்டும்.

ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் தினத்தன்று ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள். இயன்ற இடங்களில் எல்லாம் அறுசுவை உணவுகளை அன்னதானமாகச் செய்யுங்கள். கழகத்தின் கொடிகள் பட்டொளி வீசிப்பறக்கட்டும். ஜெயலலிதாவின் திரு உருவப் படங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து மலர் அஞ்சலி செலுத்துங்கள்.

கடந்த காலங்களில் ஒவ்வொரு பொதுக்குழுவிலும் ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி நாம் அனைவரும் மகிழ்ந்தோம். இந்த ஆண்டு அவர் நினைவோடு அவரது உருவப் படத்தின் முன் நின்று கழகத்தைக் காப்போம், கழக அரசை நிலை நிறுத்தி மக்கள் பணியாற்றுவோம், உங்கள் ஆன்மா என்றென்றும் எங்களுக்குத் துணை நிற்கட்டும், என்று சபதம் ஏற்போம்”.

இவ்வாறு சசிகலா எழுதியுள்ளார்.

மேலும் படிக்க