• Download mobile app
15 Jan 2026, ThursdayEdition - 3627
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் கோஷம்

February 18, 2017 தண்டோரா குழு

சென்னை: சனிக்கிழமை காலை 11 மணி அளவில் சட்டப் பேரவை கூடியது. அவை கூடியதும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் தி.மு.க. உறுப்பினர்களும் நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என்றும் இல்லையெனில் வாக்கெடுப்புத் தேதியை மாற்ற வேண்டும் என்றும் கோரி அமளியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மதியம் ஒரு மணி வரை சட்டப்பே ரவை ஒத்திவைக்கப்பட்டது. பி்ன்னர் சட்டப் பேரவை கூடியதும் சட்டப் பேரவைத் தலைவர் தனபால் பேசுகையில், “சட்டப்பேரவையில் எனக்கு நடந்த கொடுமையை நான் எங்கு சென்று முறையிடுவது என் சட்டையைப் பிடித்து திமுகவினர் இழுத்தனர். சட்டப்பேரவை விதிகளின்படிதான் அவையை நடத்த முயற்சி செய்தேன்” வருத்தத்துடன் கூறினார்.

மீண்டும் சட்டப் பேரவைத் தலைவர் தனபாலை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் வாக்கெடுப்பு தேதியை மாற்ற வேண்டும் என கோஷமிட்டனர்.

மேலும் படிக்க