• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

28-வது சாலைப் பாதுகாப்பு வார விழா

February 13, 2017 தண்டோரா குழு

கோவையில் 28-வது சாலை பாதுகாப்பு வார விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மரக்கன்றுகளை நடுவது, இரு சக்கர வாகனங்களின் பேரணி ஆகியவையும் இடம்பெற்றன.

“நிழல் மையம்” என்ற அமைப்பும் காவல் துறையும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டன.

இவ்விழாவின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்குத் தலைகவசம் அணிவதன் பலன் குறித்த விழிப்புணர்வுப் பேரணி ஏற்படுத்த 65 இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து கொண்டு கோவையின் முக்கிய சாலைகள் வழியாக மக்கள் மற்றும் மாணவர்கள் பேரணியாகச் சென்றனர்.

பேரணியை கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை துணை ஆணையர் எஸ் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பின்னர் “நிழல் மையம்” அமைப்பு சார்பாக சாலை போக்குவரத்தினால் சுற்றுச்சுழலுக்கு ஏற்படும் மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை சிவானந்தா காலனி பகுதியில் 15 மரக்கன்றுகள் நடப்பட்டன.

“பொதுமக்களுக்குச் சாலைப் பாதுகாப்பு மற்றும் சுற்றுசுழல் குறித்த விழிப்புணர்வு தேவை. அதனை ஏற்படுத்தும் விதமாக இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெற்றது மிகிழ்ச்சி அளிக்கிறது. தலைக்கவசம் அணிந்து சாலை விதிகளைப் பின்பற்றி வாகனங்களை இயக்கினால் உயிரிழப்பைத் தவிர்க்கலாம். சாலை விபத்துகளைத் தடுக்கலாம்” என்று கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் எஸ். சரவணன் “தண்டோரா” இணையத்திடம் கூறினார்.

மேலும் படிக்க