• Download mobile app
27 Aug 2026, ThursdayEdition - 3851
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்கம் – அண்ணாமலை பங்கேற்பு !

August 27, 2026 தண்டோரா குழு

கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் மாணவர் பேரவை தொடக்க விழா,இன்று (ஆகஸ்ட் 27) காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள தனலட்சுமி அம்மாள் பன்னோக்கு அரங்கில் நடைபெற்றது.

விழாவில் வீத லீடர்ஸ் அமைப்பின் தலைமைத் தொண்டரும்,முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே.அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசுகையில்,

இன்றைய தலைமுறை இளைஞர்கள் வேகமான மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். இன்று பொறுப்பேற்றுக் கொள்ளும் மாணவர்கள் தலைவர்கள் மட்டுமல்ல; கல்லூரியின் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தின் பிரதிநிதிகள் என்ற பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார். கல்லூரிக் காலத்தில் மாணவர் தலைவர்களாக இருந்த பலர், பின்னாளில் சிறந்த சமூகத் தலைவர்களாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்,இளைஞர்களிடையே ஏற்படும் மனஅழுத்தம்,வேலைவாய்ப்பின்மை, புறக்கணிப்பு உள்ளிட்ட காரணிகள் அவர்களை போதைப்பொருள் கலாச்சாரத்தை நோக்கி நகர்த்துவதாகத் தெரிவித்தார். எனவே, போதைப்பொருள் ஒழிப்பில் கவனம் செலுத்துவதுடன், மாணவர்களை போதைப் பழக்கத்திற்கு தூண்டும் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விழாவிற்கு கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் C.A. வாசுகி தலைமை வகித்தார். கல்லூரி மேலாண்மைக்குழு பொருளாளர் மருத்துவர் O.N. பரமசிவன் முன்னிலை வகித்தார். முன்னதாக, கல்லூரி முதல்வர் முனைவர் வே. சங்கீதா வரவேற்புரையாற்றினார்.

மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர் தலைவர், செயலர், துணைத்தலைவர், இணைச்செயலர் மற்றும் விளையாட்டுத்துறைச் செயலர்கள் ஆகியோருக்கு, அவர்களின் பெயர் மற்றும் பதவி பொறிக்கப்பட்ட வில்லைகளை சிறப்பு விருந்தினர் வழங்கினார்.

தொடர்ந்து, போதைப்பொருள் தவிர்ப்பு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபடாமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தேசப்பற்று ஆகியவற்றை வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

விழாவின் நிறைவில், மாணவர் பேரவைத் தலைவரும் முதுஅறிவியல் கணிதம் இரண்டாம் ஆண்டு மாணவியுமான செல்வி B. சந்தியா நன்றியுரையாற்றினார்.

மேலும் படிக்க