• Download mobile app
15 Aug 2026, SaturdayEdition - 3839
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ‘யூனிகார்ன் கோச் உச்சி மாநாடு 2026’ துவக்கம்;தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் பங்கேற்பு

August 15, 2026 தண்டோரா குழு

கோவையில் ‘யூனிகார்ன் கோச் உச்சி மாநாடு 2026’ எனும் நான்கு நாள் பிரமாண்ட மாநாடு துவங்கியது.

அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,சாதனை, சமூகப் பங்களிப்பு, ஆன்மிக வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தொழில் வளர்ச்சி மற்றும் சிறப்பான அங்கீகாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடைபெற்றன.

மாநாட்டை பிஞ்சி மார்க்கெட்டிங் நிறுவனத்தின் நிறுவனர் கோபால் கிருஷ்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.தொழில்முனைவோர் மற்றும் பயிற்சியாளர்களை ஒரே தளத்தில் இணைத்து, அவர்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிகாட்டும் வகையில் இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு உரைகள், கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.மாநாட்டின் முக்கிய நிகழ்வாக 23 ‘யூனிகார்ன்’ விருதுகள் வழங்கப்பட்டன.

ஒரு கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் வருவாய் ஈட்டிய பயிற்சியாளர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், 48 பயிற்சியாளர்களுக்கு அங்கீகாரம் மற்றும் விருதுகளை கோபால் கிருஷ்ணன் மற்றும் சந்தோஷ் ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்.மேலும், அடுத்தகட்ட சாதனையை நோக்கிப் பயணித்து வரும் பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 25 ‘வளரும் யூனிகார்ன்’ விருதுகளும் வழங்கப்பட்டன.

இது குறித்து கோபால் கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

வெற்றியை கொண்டாடுவதுடன் சமூகத்திற்கான பங்களிப்பையும் வலியுறுத்தும் வகையில்,மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் ‘அனாதி’ அறக்கட்டளையின் சமூகப் பணிகளுக்கு ஆதரவாக நடைபெறுவதாக தெரிவித்தார்.
வருவாய் சாதனையை மட்டும் கொண்டாடாமல், சமூகத்திற்கான பங்களிப்பு, தனிமனித மாற்றம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடுத்தகட்ட வளர்ச்சியை உருவாக்குவதே மாநாட்டின் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க