• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூரில் அதிநவீன UBE முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை: 40 வயது ஐடி பணியாளர் மீண்டும் நடமாட்டத் திறன்

February 26, 2026 தண்டோரா குழு

தஞ்சாவூரிலுள்ள மீனாட்சி மருத்துவமனையில் அதிநவீன யூனிலேட்டரல் பைபோர்ட்டல் எண்டோஸ்கோப்பிக் சர்ஜரி (UBE) முறையின் மூலம் 40 வயது தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளருக்கு வெற்றிகரமாக முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்து, அவரின் நடமாட்டத்திறன் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

முதுகுத்தண்டு வட்டில் ஏற்பட்ட பெரிய வீக்கம் காரணமாக, நரம்புகள் கடுமையாக அழுத்தமடைந்து ‘Cauda Equina Syndrome’ எனப்படும் ஆபத்தான நிலை ஏற்பட்டது. இதனால் கடுமையான வலி மற்றும் நடப்பதில் சிரமம் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Unilateral Biportal Endoscopic (UBE) Surgery என்பது குறைந்த ஊடுருவலுடன் செய்யப்படும் நவீன முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை முறை.1 செ.மீக்கும் குறைவான இரண்டு சிறிய துளைகள் மூலம், எண்டோஸ்கோப்பிக் கருவிகளை பயன்படுத்தி நரம்புகளை அழுத்தும் வட்டுப் பகுதி அகற்றப்படுகிறது.

இந்த முறையின் சிறப்பம்சங்கள்:

தசை பாதிப்பு மிகக் குறைவு ரத்த இழப்பு குறைவு அறுவை சிகிச்சைக்குப் பின் வலி குறைவு விரைவான குணமடைதல்
குறைந்த நாட்களில் வீடு திரும்பும் வசதி
மருத்துவமனை நிர்வாகத்தின் தகவலின்படி, காவிரி டெல்டா பிராந்தியத்தில் இம்முறை முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட UBE அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் மகராஜன் தலைமையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.அவருடன் டாக்டர் அரி மாணிக்கம், மயக்கமருந்து நிபுணர்
டாக்டர் சண்முக ஹரிஹரன்,எலும்பியல் ஆலோசகர் ஆகியோர் குழுவில் இருந்தனர்.
அறுவை சிகிச்சைக்கு பின் சில நாட்களிலேயே நோயாளி மீண்டும் நடக்கத் தொடங்கியதுடன், தற்போது தனது பணிக்கும் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து டாக்டர் கார்த்திகேயன் மகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“இரண்டு சிறிய துளைகள் மூலம் செய்யப்படும் இந்த நவீன சிகிச்சை, சிக்கலான முதுகுத்தண்டு பிரச்சனைகளுக்கும் பாதுகாப்பான தீர்வாக உள்ளது.தசைகள் பாதிக்கப்படாமல், குறைந்த வலியுடன் நோயாளி விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப முடிகிறது” என்றார்.மேலும்,இந்த வசதி தற்போது டெல்டா பகுதியில் கிடைப்பதால், முதுகுத்தண்டு சிகிச்சைக்காக பெருநகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் வி.பிரவீன்,எலும்பியல் துறைத் தலைவர் டாக்டர் பார்த்திபன் மற்றும் எலும்பியல் ஆலோசகர் டாக்டர் பாலகுருநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க