February 12, 2026
தண்டோரா குழு
பணியிடத்தில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, சூயஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாமை நடத்தியது.
மருத்துவ உதவி கிடைக்கும் வரை, அவசர மருத்துவத் தேவைகளைச் சமாளிக்கவும், உடனடியாக உதவி செய்யவும் ஊழியர்களைத் தயார்படுத்த இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் அடிப்படை உயிர் காக்கும் முறைகள், ரத்தப்போக்கை கட்டுப்படுத்துதல், தீக்காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகளுக்கு சிகிச்சை அளித்தல் போன்றவை கற்றுத்தரப்பட்டன.
பெங்களூரு ‘3S லைப் சேப் அகாடமி’யைச் சேர்ந்த சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர் சுபாஷ், செய்முறை விளக்கங்கள் மூலம் உயிர் காக்கும் திறன்கள் குறித்து ஊழியர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.
கோயம்புத்தூர் 24×7 குடிநீர் திட்டத்தின் சூயஸ் திட்ட இயக்குனர் சங்ராம் பட்நாயக் கூறுகையில்,
நாங்கள் எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்துகிறோம்.அனைத்து இடங்களிலும் இது போன்ற பாதுகாப்பு பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்துவதிலும், அவசர கால தயார்நிலையை வலுப்படுத்துவதிலும் எங்கள் நிர்வாகம் உறுதியாக உள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சூயஸ் நிறுவன மேலாளர் பங்கஜ் கூறுகையில்,
ஊழியர்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.அவசர காலங்களில் நம்பிக்கையுடனும் விரைவாகவும் செயல்பட இந்த முதலுதவி பயிற்சி ஊழியர்களுக்கு உதவும்.இத்தகைய முயற்சிகள் உயிர்களைக் காப்பாற்றுவது மட்டுமின்றி, நிறுவனத்திற்குள் ஒரு வலுவான பாதுகாப்பு கலாச்சாரத்தையும் உருவாக்கும் என்று அவர் கூறினார்.
இந்த முகாமில் ஊழியர்கள் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணியிடத்தை உருவாக்கும் முயற்சியில் இது மற்றொரு முக்கிய முயற்சியாகும்.