February 2, 2026
தண்டோரா குழு
மத்திய பட்ஜெட் குடிநீர், சுகாதாரம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் இது இந்தியாவின் வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று சூயஸ் இந்தியா தலைமை செயல் அதிகாரி ரஷ்மி ரஞ்சன் ராய் வரவேற்றுள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து சூயஸ் இந்தியா தலைமை செயல் அதிகாரி ரஷ்மி ரஞ்சன் ராய் கூறுகையில், 2026-27ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட், இந்தியாவின் சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் வலிமையை மேம்படுத்தும் நோக்கில் ‘மூன்று கடமைகள்’ மீது முக்கியமாக கவனம் செலுத்தியுள்ளது.
உள்கட்டமைப்புக்கான மூலதனச் செலவு 12.2 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது நகர்ப்புற வளர்ச்சிக்கான அரசின் நிலையான முயற்சியைக் காட்டுகிறது. குறிப்பாக ‘ஜல் ஜீவன் மிஷன்’ மூலம் குடிநீர் வசதி, ‘ஸ்வச் பாரத்’ மூலம் சுகாதாரம் மற்றும் ‘அம்ருத் 2.0’ மூலம் நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்றவை இதில் அடங்கும். இது ‘விகசித் பாரத் என்னும் வளர்ந்த இந்தியா 2047 இலக்கை நோக்கி நாட்டை வேகமாக முன்னேற்ற உதவும்.சிறு நகரங்களை மையமாகக் கொண்டு அதிகரிக்கப்பட்டுள்ள இந்த முதலீடு, தண்ணீர் வினியோக முறைகள் மற்றும் உறுதியான சுகாதாரக் கட்டமைப்புகளை உருவாக்க உதவும்.
இது தனியார் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்படுவதை ஊக்குவிப்பதோடு, நகர்ப்புற மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தும். இதன் மூலம், இந்திய நகரங்கள் வருங்காலத்திற்கு ஏற்ற, சுற்றுச்சூழலைப் பாதிக்காத நிலையான வளர்ச்சியைப் பெறத் தயாராக உள்ளன என்றார்.மேலும் அவர் கூறுகையில், எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இது எங்களுக்கு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாகும்.
பாதுகாப்பான மற்றும் காலநிலைக்கு ஏற்ற குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு சேவைகளை வழங்க, பல்வேறு நகரங்கள் மற்றும் அரசுகளுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக உள்ளோம். இதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், இந்தியாவின் நகர மாற்றத்தில் முக்கிய பங்காற்றவும் தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தார்.