• Download mobile app
17 Jul 2026, FridayEdition - 3810
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர் கே ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற யங் ப்ரேனர் (Young Preneur) 2026 நிகழ்ச்சி

January 11, 2026 தண்டோரா குழு

கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள ஆர்.கே ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையம் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை பொங்கல் விழாவும் தொடர்ந்து Young preneur 2026 இளம் மாணவத் தொழில் முனைவோர் 2026 நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் கோவை மாவட்டத் துணை கமிஷனர் திவ்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

மாணவர்களுக்கு நேரடியாக தொழில் துறை அனுபவத்தை வழங்கும் வகையில் நடைபெற்ற இதில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்களது சொந்த முயற்சியில் சுமார் 25 க்கும் மேற்பட்ட அரங்குகளில் தங்களது பொருட்களை காட்சி படுத்தி விற்பனை செய்தனர்.இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான துணி வகைகள், பேன்சி பொருட்கள், உணவு அரங்குகள்,என பல்வேறு அரங்குகளை அமைத்த மாணவர்களிடம் பெற்றோர்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள்,பொதுமக்கள் என பலரும் பொருட்களை ஆவலுடன் வாங்கி சென்றனர்.

நிகழ்வில் இந்நாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் அனைத்து ஆசிரிய பெருமக்கள் என அனைவரும் 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாணவர்களின் அரங்குகளை பார்வையிட்டு அவர்களின் இளம் தொழிலை ஊக்கப்படுத்தி மகிழ்ந்ததுடன் விழாவையும் சிறப்பித்தனர்.

ஆர்.கே.எஸ் கல்வி நிறுவனம் சார்பாக மாணவர்களை அடுத்த தலைமுறை தொழில் முனைவோர்களாக மாற்றும் புதிய முயற்சியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க