• Download mobile app
28 Jun 2025, SaturdayEdition - 3426
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொழில்துறைக்கான ஆட்டோமேஷன்தொழில்நுட்ப நவீனமயமாக்கலுக்கு புதிய ஸ்மார்ட் தீர்வுகள்: லாரிட்ஸ் நுட்சன் எலக்ட்ரிக்கல் அண்ட் ஆட்டோமேஷன் நிறுவனம் அறிமுகம்

June 28, 2025 தண்டோரா குழு

இந்திய மின்சாரம் மற்றும் ஆட்டோமேஷன் துறையில் முன்னணி நிறுவனமான லாரிட்ஸ் நுட்சன் எலக்ட்ரிக்கல் அண்ட் ஆட்டோமேஷன் நிறுவனம், நாட்டின் முக்கிய தொழில்துறை மண்டலங்கள் மற்றும் வளர்ச்சி பகுதிகளுக்கான மின்சார பொருட்கள் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அதன் மிகப்பெரிய தயாரிப்பு பிரிவை அறிமுகம் செய்துள்ளது.

இந்த லட்சிய முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த பிராண்ட் நாடு முழுவதும் 30 தொழில்துறை நகரங்களில் தங்களின் பல்வேறு புதிய தயாரிப்புகள் குறித்து காட்சிப்படுத்த உள்ளது.இந்தியாவின் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்த உள்ளூர் தொழில் நிறுவனங்கள்,பங்குதாரர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது.குறைந்த மின்னழுத்தம்,தொழில்துறை ஆட்டோமேஷன் மற்றும் புதிய எரிசக்தி தீர்வுகள் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி, லாரிட்ஸ் நுட்சன் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியில் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தை முன்னெடுத்து வருகிறது.

மத்திய அரசின் விக்சித் பாரத் 2047 தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட்ட மற்றும் ஆற்றல்மிக்க இந்தியாவை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில் இந்த பிரச்சாரத்தை துவக்கி உள்ளது.

இது குறித்து லாரிட்ஸ் நுட்சன் எலக்ட்ரிக்கல் அண்ட் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி நரேஷ் குமார் கூறுகையில்,

எங்களைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாகவும், வேகமாகவும்,புத்திசாலித்தனமாகவும் பணியாற்ற சிறந்த ஸ்மார்ட் தொழில்நுட்பங்களை வழங்குவதே எங்கள் நோக்கமாகும்.இந்த தயாரிப்பு காட்சிப்படுத்தலின் மூலம், புதுமை அணுகக்கூடியதாகவும், தகவமைப்புக்கு ஏற்றதாகவும்,இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு பிராந்தியத்தின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உதாரணத்திற்கு ராய்ப்பூரில் ஒரு அரிசி ஆலையை முழுமையான ஆட்டோமேஷன் ஆக்குவது, கோயம்புத்தூரில் ஒரு ஜவுளி ஆலைக்கு மின்சாரம் வழங்குவது அல்லது புனேவில் ஒரு ஆலையை நவீனமயமாக்குவது என எதுவாக இருந்தாலும்,அதற்கான உடனடி தீர்வுகள் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

இந்தியாவின் மின் சாதனத் துறை 2029ம் ஆண்டுக்குள் 95 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக வளர்ச்சி அடையும் என்றும், தொழில்துறை ஆட்டோமேஷன் 2033ம் ஆண்டுக்குள் 39.65 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால்,அதன் வளர்ச்சி என்பது தெளிவாகத் தெரிகிறது.இந்திய உற்பத்தியாளர்கள் ஏற்கனவே தங்கள் பட்ஜெட்டில் 35 சதவீதத்தை தொழில்நுட்ப நவீனமயமாக்கலில் முதலீடு செய்து வருகின்றனர் – இது உலக சராசரியை விட அதிகமாகும். இந்த மாற்றங்கள் வெறும் எண்கள் அல்ல; அவை நாடு தழுவிய அளவில் புத்திசாலித்தனமான, திறமையான அமைப்புகளை நோக்கிய வளர்ச்சியை பிரதிபலிக்கின்றன.

விக்சித் பாரத் 2047 தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து, நாங்கள் தயாரிப்புகளை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை இந்தியாவின் புத்திசாலித்தனமான, தூய்மையான மற்றும் வளர்ச்சிமிக்க எதிர்கால இந்தியாவை உருவாக்க தயாராக இருக்கிறோம் என்றும் அவர் மேலும் கூறினார்.விரிவான மின்சார வாகன சார்ஜிங் சுற்றுச்சூழல் அமைப்பு, மின்சார சார்ஜர்கள், மையப்படுத்தப்பட்ட சார்ஜ் மேலாண்மை அமைப்பு மற்றும் கிளவுட் அடிப்படையிலான வாடிக்கையாளர் பயன்பாடுகள் என பல்வேறு தொழில்நுட்ப தீர்வுகளை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. லாரிட்ஸ் நுட்சனின் சமீபத்திய தயாரிப்புகள் இந்தியாவின் பிராந்திய பன்முகத்தன்மை, மாநில- கொள்கைகள் மற்றும் துறை முன்னுரிமைகள் பற்றிய ஆழமான புரிதலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதன் விரிவான வெளிப்பாட்டின் ஒரு பகுதியாக, நிறுவனம் புனே மற்றும் நொய்டாவிலிருந்து புவனேஸ்வர், கோயம்புத்தூர் மற்றும் குவஹாத்தி வரை 30 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு அதன் புதுமைகளைக் கொண்டு வருகிறது.

மேலும் படிக்க