• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதாவின் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றுகின்றன – ஆளுநர் பெருமிதம்

January 26, 2017 தண்டோரா குழு

“மறைந்த தமிழக முதலமைச்சர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை மற்ற மாநிலங்களும் இதர நாடுகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. இது மகிழ்ச்சி தருகிறது” என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

குடியரசு தினத்தையொட்டி, அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

“நமது முன்னோர்கள் கண்ட கனவுப்படி நாட்டை வளமாக்க இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும். இந்திய அரசியலமைப்பின் கட்டமைப்பு உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

மகாராஷ்டிர ஆளுநராக இருப்பதால் மும்பையில் தேசியக்கொடி ஏற்றினேன். அதனால், தமிழகத்தில் தேசியக்கொடியை ஏற்ற முடியவில்லை.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் “அம்மா உணவகம்” போன்ற பல திட்டங்கள் ஏழைகளின் சுமையைக் குறைத்துள்ளன. இந்த திட்டங்களை மற்ற மாநிலங்களும், பிற நாடுகளும் பின்பற்ற தொடங்கியுள்ளன. இது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழகத்தில் தொடக்கக் கல்வி பெறுவோர் 99. 85 சதவீதம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உயர்கல்வி பெறுவோரின் சதவீதம் தேசிய அளவை விட அதிகமாக உள்ளது”.

இவ்வாறு வித்யாசாகர் ராவ் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க