• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரண்டு சக்கர வாகனம் திருடிய நபர்களை கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்

November 12, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுக்கா காவல் நிலைய பகுதியில் வசிக்கும் சபரீஸ்வரன் (29) என்பவர் அவரது இரண்டு சக்கர வாகனத்தை 08.11.2024-ம் தேதி இரவு வீட்டின் முன் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.மறுநாள் காலை வந்து பார்க்கும் போது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை காணவில்லை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேற்படி வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,உத்தரவிட்டதன் பேரில், பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மேற்படி திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கவிராஜ் (20), வெங்கடேசன் மகன் துணைவன் என்ற ஆகாஷ் (21)மகேந்திரன் மகன் சிவ சஞ்சய் (21) மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கஜேந்திரன் மகன் யுகப்பிரதீப் (20) ஆகியோர்களை கைது செய்து மேற்படி வழக்கின் சொத்தான இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

மேலும் படிக்க