• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பனிச்சரிவில் 5 வீரர்கள் பலி

January 25, 2017 தண்டோரா குழு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதன்கிழமை(ஜனவரி 25) காஷ்மீர் ராணுவ முகாம் மீது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறுகையில்

“காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சொனாமார்கில் உள்ள ராணுவ முகாம் மீது பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் உட்பட 5 வீரர்கள் உயிரிழந்னதுள்ளனர்.இறந்த வீரர் ஒருவருடைய சடலம் கிடைத்துள்ளது. இறந்தவர்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என கருதுகிறேன்.”

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சில நாட்களாகவே கடுமையான உறைப்பனி பெய்து வருகிறது. முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பண்டிபோரா மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 4 பேர் உயிரோடு புதைக்கப்பட்டனர். ஜனவரி 26ம் தேதி வரை பரவலாக மழை மற்றும் பனிப்பொலிவு இருக்கும் என்று பிராந்திய வானிலை ஆய்வு அலுவலகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து மலைப்பகுதி மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க