• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காவல் வானகங்கள் பொது ஏலம் எடுக்க விருப்பமா – தேதி அறிவிப்பு!

October 17, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்ட காவல்துறையில் கழிவு பயன்படுத்தப்பட்டு 08 இரு சக்கர செய்யப்பட்ட 05 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் வாகனங்கள் என மொத்தம் 13 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 06.11.2024 அன்று காலை 10.00 மணிக்கு கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட 13 வாகனங்களும் கோவை மாவட்ட மோட்டார் வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் 05.11.2024 அன்று 05.00 மணி மாலை வரை வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம் . மேலும் அவ்வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் , 05.11.2024 அன்று மாலை 06.00 மணிக்குள் இரு சக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ .1000 / – மற்றும் நான்கு சக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ .2000 / – முன்பணம் செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து பதிவு செய்தல் வேண்டும்.

மேலும்,ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (இருசக்கர வாகனங்களுக்கு 12% நான்கு சக்கர வாகனங்களுக்கு 18% ) முழுவதையும் அரசுக்கு அன்றே
ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க