தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் மற்றும் அமிர்த வித்ய விஷ்வ பீடம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது.இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து
100 மேற்பட்ட பாரா நீச்சல் வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்,பார்வையற்றோர், உயரம் குறைந்தவர்கள்,அறிவுசார் குறைபாடு உடையோர் போன்ற பிரிவுகளுடைய மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 50 மீட்டர் 100 மீட்டர் ப்ரீ ஸ்டைல்
பேக் ஸ்டிரோக், பட்டர்பிளை ஸ்டிரோக்
ப்ரஸ்ட் ஸ்டிரோக் 150 மீட்டர் பிரீ ஸ்டைல்
மற்றும் 200 மீட்டர் தனிநபர் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டிகளின் முடிவில் 317 புள்ளியுடன் சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை பெற்றது. 118 புள்ளிகளுடன் சேலம் அணி இரண்டாம் இடத்தை பிடித்தது.இப்போட்டியில் தகுதி பெற்ற பாரா நீச்சல் வீராங்கனைகள் கோவாவில் நடைபெறும் தேசிய பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர் வீராங்கனைகளுக்கு டி ஷர்ட், தங்கு வசதி, உணவு,உள்ளூர் போக்குவரத்து போன்ற அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
வீரர் வீராங்கனைகளுக்கு பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தேசிய துணை தலைவர் இன்ஜினியர் சந்திரசேகர் பதக்கம் அணிவித்து கோப்பை வழங்கி சிறப்பித்தார்.
பொதுச் செயலாளர் கிருபாகராஜா, கோவை மாவட்ட பாரா விளையாட்டு சங்கத்தின் தலைவர் ஷர்மிளா ராம் ஆனந்த் உள்ளிட்டவர் கலந்து கொண்டனர்.
போட்டியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்