• Download mobile app
16 Feb 2026, MondayEdition - 3659
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை போச்சே புட் எக்ஸ்பிரஸ் ஓட்டலில் தங்க நாணயத்துடன் ஓணம் உணவு திருவிழா கொண்டாட்டம்

September 15, 2024 தண்டோரா குழு

மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான ஓணம் பண்டிகை இன்று 15ந் தேதி கொண்டப்பட்டது.
இந்நிலையில், கோவையில் அமைந்துள்ள போச்சே புட் எக்ஸ்பிரஸ் ஓட்டலில் ஓணம் பண்டிகையொட்டி சிறப்பு போச்சே ஓணம் விருந்து என்ற உணவு திருவிழா நடைபெற்றது.

இதில் சிறப்பம்சமாக 22 வகையான ஓணம் சத்யா உணவு பரிமாறப்பட்டது.இந்த விருந்தில் பாரம்பரிய உடை அணிந்து 22 வகையான உணவுகளை சாப்பிடும் நபர்களுக்கு இலவசமாக தங்க நாணயம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இதனை அடுத்து 200க்கும் மேற்பட்டோர் வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செய்தனர்.

பின்னர் இன்று மதியம் 12:30 மணியளவில் துவங்கிய போச்சு ஓணம் விருந்தில் முன்பதிவு செய்த அனைவரும் கலந்து கொண்டு 22 வகையான உணவுகளை உட்கொண்டனர்.இதில் 22 வகையான உணவுகளையும் முழுமையாக குறைந்த நேரத்தில் சாப்பிட்ட நபர்களுக்கு முதல் பரிசாக 4 கிராம் தங்க நாணயமும், இரண்டாம் பரிசாக 2 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

முதல் பரிசினை டினோ – எஸ்தர் ஜோடியும், இரண்டாம் பரிசினை வினித் ஜோடியும் பெற்றது. மேலும் இந்த உணவு விருந்தில் கலந்து கொண்ட நபர்கள் தங்களது செல்ஃபி புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அதிக பார்வை கொண்ட புகைப்படத்திற்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டதில்,சிறந்த புகைப்பட பார்வைக்காக பாதுஷா – நேகா என்ற ஜோடிக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது.

போச்சே உணவு திருவிழா நடைபெறுவதை ஒட்டி ஹோட்டல் முழுவதும் ஓணம் பண்டிகைக்கான பூக்கோலம், மாபலி வேடம் அணிந்த மன்னர் மற்றும் பணிபுரியும் ஊழியர்கள் ஓணம் பாரம்பரிய உடை அணிந்து இருந்தனர்.

மேலும் படிக்க