• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் சித்தியாடைந்தார்

March 27, 2024 தண்டோரா குழு

ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா தனது 95வது வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு சித்தியடைந்தார்.

2017 ஆம் ஆண்டில் ராமகிருஷ்ணா மிஷனின் 16 வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுவாமி ஸ்மரானந்தா. ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷனின் மிகவும் மதிப்பிற்குரிய தலைவர் மகராஜ், ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தாஜி இரவு 8.14 மணிக்கு மகாசமாதி அடைந்தார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் ஏற்கனவே சிறுநீர் பாதை நோய்த்தொற்றுடன் ஜனவரி 29 அன்று ராமகிருஷ்ணா மிஷன் சேவா பிரதிஷ்டானில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மூச்சுக்குழாய் பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு மார்ச் 3 ஆம் தேதி முதல் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் சித்தியடைந்தார்.

இந்நிலையில், அவரது மறைவிற்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான பதிவில்,

‘ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா ஜி மகராஜ், ஆன்மீகம் மற்றும் சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். எண்ணற்ற இதயங்களிலும் மனங்களிலும் அழியாத தடம் பதித்தவர். அவரது இரக்கமும் ஞானமும் தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.பல வருடங்களாக அவருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது..ஓம் சாந்தி’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க