• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி எஸ் ஜி மருத்துவமனையில் நல வாழ்வு குறித்து கருத்தரங்கு

March 2, 2024 தண்டோரா குழு

கோவை பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரியும்,பி.எஸ்.ஜி மருத்துவமனையும் இணைந்து எம்.எஸ். சி ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் எனும் புதிய பாடப்பிரிவை நடத்தி வருகிறது.

இந்தத் துறை மாணவர்களுக்கு ஹெல்த் 360 எனும் தலைப்பில் நல வாழ்வு குறித்த கருத்துரங்கு கோவை பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

கருத்தரங்கு குறித்து கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன் கூறுகையில்,

தற்போது மருத்துவமனைகளுக்கும், கிளினிக்,நர்சிங் ஹோம் களில் ஹெல்த் அட்மினிஸ்ட்ரேட்டர் தேவை மிகவும் உள்ளது. ஒரு மருத்துவமனையை நடத்துவதற்கான திறமைகளை எம்.எஸ்.சி ஹெல்த் அட்மினிஸ்ட்ரேஷன் எனும் பாடப்பிரிவு வழங்குகிறது.இந்த பாடப் பிரிவில் 30 மாணவர்கள் படித்து பட்டம் பெற்ற உள்ளனர்.இவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அதனை நிர்வாகம் செய்யும் திறமையுடன் வெளிவர உள்ளனர்.இவர்களுக்கு எழுத்துத் தேர்வு மட்டுமல்லாமல்,மருத்துவமனையில் பணியாற்றிய அனுபவங்களுடன் வருகின்றனர்.

மருத்துவமனையை சரியாக நடைபெற டாக்டர்கள், நர்சுகள், மட்டுமல்லாமல் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் பங்கும் முக்கியமானது. இதனை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஹெல்த் 360 எனும் பெயரில் கருத்தரங்கம் கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பிருந்தா, அங்கு ராஜ், அமராவதி உள்ளிட்ட பலர் கலந்த கொண்டனர்.

மேலும் படிக்க