• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதீத திறமையால் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டுஸ் புத்தகத்தில் இடம்பெற்ற கோவை சிறுமி!

February 19, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியில் வசிக்கும் தீபன் மற்றும் மதுபதி தம்பதியினர் மகள் ஷிவானி.1 வயது 10 மாதங்கள் ஆன இவர் தனது அதீத திறமையால் சாதனை புரிந்துள்ளார்.

இந்த சிறிய வயதிலேயே பதினோரு தேசிய அடையாளங்கள்,எட்டு வண்ணங்கள்,9 வடிவங்கள்,6 வகையான முக பாவனைகள், 4 நர்சரி ரைம்களைப் படிக்கவும்,ஆங்கில சொற்களை படிக்கவும்,1 முதல் 10 எண்களை சொல்லவும், உயிர் எழுத்துகள் மற்றும் ஆத்திச்சூடி சொல்கிறார்.

இவரின் இந்த அதீத திறமையை அடையாளம் கண்டு அங்கீகரித்த இந்தியன் புக் ஆப் ரெக்கார்டுஸ் இவருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.

இது குறித்து அவரது தாய் மதுமதி கூறுகையில்,

இந்தியன் புக் ஆப் ரெக்கார்டுஸ்ல் எனது மகள் ஷிவானியின் பெயர் இடம்பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவள் புத்தகத்தில் ஆர்வமாக இருக்கிறாள் என்பதை அடையாளம் காட்டியது அவளுடைய அத்தை ஷாந்தினி. அமேசானின் ஃபிளாஷ் கார்டுகள் மற்றும் “1000 வார்த்தைகள்” புத்தகம் உண்மையில் உதவியது. நான் தொட்டு உணரும் புத்தகங்களுடன் தொடங்கினேன்.

கற்பிக்க முயற்சிக்காதீர்கள் ஆர்வத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.அவர்களை உட்கார வைத்து கற்பிக்க முடியாது. அவர்களின் ஓட்டத்துடன் செல்லுங்கள். எனது மகளின் இந்த இன்னமும் முயற்சி செய்து அடுக்க கட்டத்திற்கு கொண்டு செல்வோம் என்றார்.

மேலும் படிக்க