• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய மற்றும் சிறந்த ஆட்டிறைச்சி வழங்க Licious “சண்டே ஸ்பெஷல்”-ஐ அறிமுகப்படுத்துகிறது

February 9, 2024 தண்டோரா குழு

நாட்டிலேயே மிகவும் விரும்பப்படும் இறைச்சி மற்றும் கடல் உணவுப் பிராண்டான Licious – இப்போது தமிழ்நாட்டின் விவேகமான வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், ஆட்டிறைச்சியையும் வழங்கி அதன் வரம்பை வலுப்படுத்துகிறது. இப்போது சென்னையில் உள்ள வாடிக்கையாளர்கள் shoulder curry cut, ribs, chops மற்றும் பல புதிய மற்றும் சிறந்த ஆட்டிறைச்சியைப் பெறலாம்.

இன்னும் சிறப்பாகச் செய்ய முடியாது என்று நீங்கள் நினைத்தபோது, உண்மையான மட்டன் பிரியர்களுக்கான மிக்ஸ்டு பேக்குகளும் உள்ளன.மட்டன் ரெசிபிகளின் வரிசைக்கு ஏற்றவாறு உங்களுக்கு விருப்பமான மட்டன் கலவைகளைப் பெறலாம்.இப்போது உங்கள் ஞாயிறு ஸ்பெஷல் ஷோவில் சுவையான மட்டன் கறி, அனைவரும் விரும்பும் வறுவல், வறுத்த அப்பிடைசர்கள் மற்றும் பலவற்றை இந்த மென்மையான இறைச்சிகளுடன் உண்டு மகிழலாம்.இவை அனைத்தும் உங்கள் வீட்டு வாசலில்- Licious ஆப் அல்லது இணையதளம் மூலம் புதிதாக டெலிவரி செய்யப்படுகிறது.

இப்போது அதைத்தான் – சண்டே ஸ்பெஷல் ஷோ என்றாலே Licious மட்டன் தான் என்கிறோம் (ஞாயிறு ஸ்பெஷல் ஷோ என்றால் Licious மட்டன் மட்டுமே).

Licious பிராண்டின் துணைத் தலைவர் சந்தோஷ் ஹெக்டே கூறுகையில்,

“Licious-ல் எங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருங்கி பழகவும் அவர்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகளை ஆழமாக ஆராய்வதே எங்கள் நிலையான முயற்சியாகும். இறைச்சியைப் பற்றி நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோமோ, அதே அளவு நமது நுகர்வோரைப் புரிந்து கொள்வதும் நமக்குத் தேவை.ஆட்டிறைச்சி எங்கள் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றாகும் மற்றும் உண்மையான உணர்வு பூர்வமான இன்பம் ஆகும்.

குறிப்பாக, சென்னையில், ”சண்டே ஸ்பெஷல்கள்’ காலை உணவில் இருந்து தொடங்கி மதிய உணவு மற்றும் இரவு உணவு வரை மக்கள் ஆட்டிறைச்சியை விரும்புகின்றனர். ஒரு பிளாக்பஸ்டர் ஞாயிற்றுக்கிழமையின் அடையாளம் டிவியில் பிளாக்பஸ்டர்களை ரசிப்பதுடன் இணைந்து பல விதமான மட்டன் உணவுகளை உண்டு மகிழ்வதும்தான். இதற்கு சரியான ஆட்டிறைச்சி மிக முக்கியமானதாகும் – மென்மையானதாகவும், சுத்தமானதாகவும் மற்றும் அதன் செய்முறைக்கு ஏற்றவாறும் இருக்க வேண்டும். சுத்தமான, புதிய மற்றும் சதைப்பற்றுள்ள ஆட்டிறைச்சி துண்டுகள் மற்றும் கொழுப்பின் சரியான கலவை உணவை சுவையுள்ளதாக்கும். இவை அனைத்தும் பிளாக்பஸ்டர் ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான சரியான பொருட்கள் ஆகும்” என்றார்.

தரமான ஆட்டிறைச்சியை வழங்குவதற்காக பிராண்டின் அர்ப்பணிப்பானது, தரமான இளம் ஆட்டுக்குட்டிகளைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து தொடங்குகிறது.இறைச்சி குறைந்தபட்சம் 12 மணி நேரம் வரை தனியாக வைக்கப்படுகிறது. பின்பு இது சமமாக வேகவும், மசாலாப் பொருட்களை உறிஞ்சுவதற்காகவும் சமமாக வெட்டப்படுகிறது.சுகாதாரமான பைகளில் வைக்கப்பட்டு உங்கள் வீட்டு வாசலுக்கு வரும் வரை 0 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பராமரிக்கப்படுகிறது.

லிசியஸ் வழங்கும் இந்த இறைச்சியை வைத்து மட்டன் குருமா, சுக்கா அல்லது குழம்பு போன்ற சுவையான உணவுகளை நீங்கள் சமைக்கலாம். உண்மையிலேயே மகிழ்ச்சிகரமான இறைச்சி சுவையை அனுபவத்திற்காக, பிராண்ட் கல்லீரல், இதயம், ட்ரொட்டர்ஸ் மற்றும் பாயா போன்ற பரந்த அளவிலான ஆட்டிறைச்சி பாகங்களையும் (ஆஃப்பல்ஸ்) வழங்குகிறது. அவற்றை அனைவரும் சுவைத்து விரும்பி சாப்பிடும் லிவர் ஃப்ரை அல்லது ஆட்டுக்கால் பாயாவாக சமைத்து சாப்பிடலாம்.

சிறந்த பகுதி என்னவென்றால் இந்த ஆட்டிறைச்சி/ஆஃப்பல்களை கிடைக்காது அல்லது குறைந்த இருப்பு பற்றிய கவலைகள் இன்றி நாள் முழுவதும் Licious
ஆப் மூலம் எளிதாக ஆர்டர் செய்யலாம்.

உங்களுக்கு பிடித்த மட்டன் இறைச்சிகளை <> Licious தளத்தில் பெறலாம்.

மேலும் படிக்க