• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரத்தினம் கலை & அறிவியல் கல்லூரி மாணவர்கள் வானொலியில் திருக்குறள் வாசித்து உலக சாதனை!!

February 8, 2024 தண்டோரா குழு

இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,இரத்தினவாணி சமுதாய வானொலி 90.8 மற்றும் தமிழ்த் துறை & காட்சி தொடர்பியல் துறை
இணைந்து உலக சாதனை நிகழ்ச்சி நடத்தியது.

உலகப் புனித நூலாக திருக்குறளை ஐநா சபை அறிவிக்க வேண்டியும்,உலக சாதனைக்காகவும் திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் இடைவேளையின்றி ஒரே நேரத்தில் 170 பேர் இரத்தினவாணி சமுதாய வானொலியில் நேரலையில் வாசித்து சாதனை படைத்தனர்.

இந்த சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியர்கள்,உதவிப் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலாளர் முனைவர் மாணிக்கம், கல்லூரி முதல்வர் முனைவர் S.பாலசுப்பிரமணியம்,முனைவர் KVP சபரிஷ் ஆய்வுத்துறை புலமுதன்மையர்,முனைவர் S N சுரேஷ் கல்லூரி துணை முதல்வர் உட்பட, சிறப்பு விருந்தினர் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் உலக சாதனையாளர் செ. வெங்கடேசன் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்வை காட்சி தொடர்பியல் துறை தலைவர் சதீஷ் ஆனந்தன், இரத்தினவாணி சமுதாய வானொலி நிலை இயக்குனர் முனைவர் ஜெ.மகேந்திரன், தமிழ் துறைத் தலைவர் முனைவர் ந. பரமேஸ்வரி மற்றும் இரத்தினம் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

மேலும் படிக்க