• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொற்சபை அகாடமி ஆப் பர்பாமிங் ஆர்ட்ஸின் பத்தாவது ஆண்டு விழா

January 8, 2024 தண்டோரா குழு

பொற்சபை அகாடமி ஆப் பர்பாமிங் ஆர்ட்ஸின் பத்தாவது ஆண்டு விழா கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சித்ரா கலையரங்கத்தில் நடைபெற்றது.

விழாவினை முன்னிருந்து குரு ஸ்ரீமதி நந்தனி செல்வராஜ் சிறப்பாக நடத்தினார். இந்த விழாவிற்கு சாந்தி ஆசிரமத்தின் நிறுவனர் டாக்டர் கெஸ்வினோ அரம் சிறப்பு விருந்தினராகவும் சுழற்சிங்கத்தின் செல்லா ராகவேந்திரன் (DGN) கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

வீணை, பாட்டு,பரதநாட்டியம் என இனிதே ஆரம்பித்த கலை விழா பார்ப்பவர்களையும் பெற்றோர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. மோகன கல்யாண் வீணையின் வாசிப்பை எல்லோரும் கேட்டு ரசித்தனர், குழந்தைகளின் பக்தி பாடல்கள் செவிக்கு விருந்தாய் அமைந்தது.

இளம் தளிர்களின் அழகான நடனம் ஸ்லோக பாடலுடன் தொடங்கியது.மதுராஷ்டகம், காவடி சிந்து, புஷ்பாஞ்சலி, கீர்த்தனைகள், கவுத்துவம், கணேஷ் பஜனை, அலாரிப்பு, சிவன் மற்றும் மயூர அலாரிப்பு, அனுமன் சாலிசா ஆகியவை மிகவும் அழகாக நடனத்தில் லயிக்க வைத்தனர்.

வர்ணத்தில் சிவபுராணக் கதையை ஒரு சிற்பி போல செதுக்கி கண் முன் படைத்தனர்.கண்ணப்ப நாயனார், மார்க்கண்டேயன், மன்மத தகனம் ஆகிய கதைகளை பக்தி சிறப்போடு கண்களுக்கு தங்கள் ஆடல் மூலம் விருந்து படைத்தனர்.

இறுதியாக மேற்கத்திய இசையில் பரத நடனத்தை புகுத்தி இணைவு நடனத்தை அரங்கேற்றி கலையரங்கத்தின் உள்ள அனைவரையும் உற்சாகப்படுத்தினர்.

மேலும் படிக்க