• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவைக்கு விசிட் அடித்த பல்வேறு நகரங்களின் மேயர்கள்

December 16, 2023 தண்டோரா குழு

கோவையில் தேசிய அளவிலான ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்த கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.இதில் பங்கேற்கவும், கோவை மாநகராட்சியில் உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பார்வையிடவும் ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், புவனேஸ்வர், பீம்பிரி சின்ஷவாட், பெங்களுர், ரூர்கேலா என 50 நகரங்களிலிருந்து மேயர்கள், ஆணையாளர்கள், மாநில உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கோவை வந்தனர்.

இந்த கருத்தரங்கு கோவை அவிநாசி சாலையில் உள்ள தி ரெசிடெண்சி ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார்.

கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கோவையில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து பேசினார்.உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம்,முத்தண்ணன்குளம் உள்ளிட்ட 7 குளங்களில் நடைபெற்ற வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

கருத்தரங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குனர் குணால் குமார் பேசுகையில், இதுபோன்ற கருத்தரங்கம் கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக அறிந்துகொண்டு அவரவர் பகுதிகளில் செயல்படுத்தவும், அதேபோல் கருத்தரங்கில் பங்கேற்றுள்ள மற்ற நகரங்களை சேர்ந்தவர்கள் மூலம் அந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சிறப்பம்சங்களை தெரிந்துக்கொள்ள என பல வகைகளில் உதவுகிறது என்று பேசினார்.

நிகழ்வில் பங்கேற்ற பிற நகர அதிகாரிகள் உக்கடம் பெரியகுளம், ஐ லவ் கோவை செல்பி பாயிண்ட், ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் மற்றும் வாலாங்குளம் மேம்பாலத்தின் கீழ் உள்ள கட்டமைப்பு என ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பார்வையிட்டு திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து அக்குழுவினர் அறிந்து கொண்டனர்.

மேலும் படிக்க